இன்றைய ராசி பலன் – 24.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 24-12-2020, மார்கழி 09, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 11.17 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:
கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும்.குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே:
எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது.அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும்.உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது.குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடக ராசி நேயர்களே:
ஆடை, ஆபரணம் சேரும்.மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை.உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சுபசெலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும்.வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே:
செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துகொள்ளாதீர்கள். அனைத்து விஷயங்களிலும் பொறுமை அவசியம்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
கன்னி ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும்.வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம்.
துலாராசி உறவுகளே:
பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.
விருச்சிக ராசி நேயர்களே:
உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும்.குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம்.வழக்கில் சதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
மகர ராசி காரர்களே:
ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும்.
கும்ப ராசி உறவுகளே:
திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.சகோதரர்களால் பயனடைவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
மீன ராசி நேயர்களே:
எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண் டாகும்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.