இன்றைய ராசி பலன் – 25.03.2021
இன்றைய பஞ்சாங்கம். 25-03-2021, பங்குனி 12, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.47 வரை பின்பு துவாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 10.48 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 10.48 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் – நவகிரக வழிபாடு நல்லது.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.சிலருக்குப் புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும்.தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் கிடைக்கும்.
மிதுன ராசி காரர்களே:தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடக ராசி நேயர்களே: குடும் பத்துடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபா ரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.முடிந்த வரை பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.
கன்னி ராசி காரர்களே:சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
துலாராசி உறவுகளே:பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொரு வர் அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.
மகர ராசி காரர்களே:கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.
கும்ப ராசி உறவுகளே:கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மீன ராசி நேயர்களே:
நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும்.