இன்றைய ராசி பலன் – 26.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 26-02-2021, மாசி 14, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.50 வரை பின்பு பௌர்ணமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.35 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும்.புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
ரிஷப ராசி அன்பர்களே:
உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங் கள் ஏற்படக்கூடும்.உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணவரவு சுமாராக இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:
புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கடக ராசி நேயர்களே:
கோபத்தால் பகை உண்டாகும்.உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும்.அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.அனாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.
கன்னி ராசி காரர்களே:
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.
துலாராசி உறவுகளே:
சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். மனஇறுக் கம் நீங்கி நிம்மதி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும்.
விருச்சிக ராசி நேயர்களே:
ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தந்தையுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும்.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
தனுசு ராசி அன்பர்களே:
ராசிக்கு பகல் 12.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது சற்று சோர்வு உண்டாகும்.மனக்குழப்பமும், கவலையும் உண்டாக கூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
மகர ராசி காரர்களே:
உங்கள் ராசிக்கு பகல் 12.35 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
கும்ப ராசி உறவுகளே:
தாயாரின் உடல் நிலை சீராகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள்.ல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
மீன ராசி நேயர்களே:
சொந்த பந்தங்கள் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.