இன்றைய ராசி பலன் 26.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.26-05-2019, வைகாசி 12, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை 08.49 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.13 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 01.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷராசி நேயர்களே:சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.
ரிஷபராசி அன்பர்களே:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வீண் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணத்தால் உடல் அசதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.
மிதுனராசி காரர்களே:சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும்.இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கடகராசி நேயர்களே: சந்திராஷ்டமம் தொடங்குவதால் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டிவரும்.
சிம்மராசி அன்பர்களே:தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி ராசி காரர்களே:அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
துலாராசி உறவுகளே:குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும், தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உடல் நலனில் கவனம் தேவை.உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகையால் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், உறவினர் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகராசி நேயர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
தனுசுராசி அன்பர்களே:விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.சகோதர வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
மகரராசி காரர்களே: முக்கிய முடிவில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்துடன் கோயில்க ளுக்குச் சென்று வருவீர்கள்.ம். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
கும்பராசி உறவுகளே:சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்ப டும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மீனராசி நேயர்களே: கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.. உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படக்கூடும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.