இன்றைய ராசி பலன் – 28.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 28-01-2022, தை 15, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் காலை 07.10 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 07.10 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.
ரிஷப ராசி அன்பர்களே:மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சகோதர வகையில் பயனடைவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.
மிதுன ராசி காரர்களே:வீட்டில் ஒற்றுமை கூடும்.வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கடக ராசி நேயர்களே:பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.
சிம்ம ராசி அன்பர்களே: தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
கன்னி ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.சொத்துப் பிரச்சினைகளில் ஒன்று தீரும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள்.
துலாராசி உறவுகளே:உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அனுசரித் துச் செல்வது நல்லது.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக் கையுடன் இருக்கவும். னதில் நிம்மதி உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.
தனுசு ராசி அன்பர்களே:உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.
மகர ராசி காரர்களே:உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும்.பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
கும்ப ராசி உறவுகளே:நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் அமைதி குறையக்கூடும்.