இன்றைய ராசி பலன் – 30.07.2021
இன்றைய பஞ்சாங்கம், 30-07-2021, ஆடி 14, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.41 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 02.02 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.02 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே:சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள்.அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.டும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
மிதுன ராசி காரர்களே:உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். சிலருக்குத் தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள்.
கடக ராசி நேயர்களே:தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு பகல் 02.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு தொடங்குவது நல்லது.பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கன்னி ராசி காரர்களே:சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.பகல் 02.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.காரியங்கள் இழுபறியாகி முடியும்.செய்யும் காரியங்கள் தடை தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளைக் காலையிலேயே மேற்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.
துலாராசி உறவுகளே:குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
மகர ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.எதிர்பாராத வேலைகள் தடையின்றி முடியும். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும்.
கும்ப ராசி உறவுகளே:சிஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள்.வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.உத்தியோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும்.