இன்றைய ராசி பலன்! 14.01.2020
இன்றைய பஞ்சாங்கம்:14-01-2020, மார்கழி 29, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.49 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் காலை 07.55 வரை பின்பு பூரம் நட்சத்திரம் பின்இரவு 05.56 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 05.56 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. போகி பண்டிகை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள்.. உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம்.
மிதுன ராசி காரர்களே:
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பிற்பகலுக்கு மேல் மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
கடக ராசி நேயர்களே:
விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
சிம்ம ராசி அன்பர்களே:
நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களின் விஷயத்தில் அனா வசியமாக தலையிட வேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கன்னி ராசி காரர்களே:
உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
துலாராசி உறவுகளே:
உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும்.
விருச்சிக ராசி நேயர்களே:
வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். உங்களின் செயல்களுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
பணப்புழக்கம் கணிசமாக உயரும்.எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும்.வெளியில் செல்லும்போது உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:
சந்திராஷ்டமம் தொடர்வதால் குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.மற்றவர்களை குறை கூறுவதை தவிருங்கள். சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.
கும்ப ராசி உறவுகளே:
மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என் றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.சகோதர உறவில் நன்மை உண்டு. எதிரிகள் பணிந்து போவார்கள்.புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலும் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.