பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய 4 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் வெடித்த பிரச்சனை..! என்ன நடக்கப் போகிறது..!?
பிக் பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் விருந்தினர்களால் நிரம்பிக் கொண்டிருக்கின்றது. வீட்டை விட்டு வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இன்று வரை இருந்தனர்.
ஆனால் அந்த அத்தனை சந்தோஷத்தையும் இன்று வீட்டிற்குள் வந்த வத்திக் குச்சி வனிதா முடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். இன்று வீட்டிற்குள் சாக்ஷி, வனிதா,சேரன், கஸ்தூரி ஆகியோர் சென்றுள்ளனர். இதில் வழமையாகவே மனதில் பட்டதை பேசும் வனிதா இன்று
வெளியே அனைவரும் பேசும் விடயமான “செரினால் தர்சன் வெளியேற்றப் பட்டார்” என்ற விடயத்தை கூறுகிறார். இதுவரை தர்சன் வெளியேற்றத்தை பற்றி நினைக்காத செரின் நீங்கள் எப்படி அப்படி சொல்ல முடியும் என அழுகிறார்.
உடனே செரினுக்காக பேசும் சாக்ஷி நீங்கள் சொல்வதெல்லாம் எப்படி சரியாகும்? என வனிதாவுடன் சண்டையிடுகிறார். இன்னும் 4 நாட்களில் நிகழ்ச்சி முடிந்துவிடும் இப்படி இருக்கையில் இந்த சண்டை தேவைதானா என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்..!!
#Day101 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/R5XIbdXUxB
— Vijay Television (@vijaytelevision) October 2, 2019