மருத்துவர்கள் இறந்ததாக கூறிய குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிந்து கொண்ட பெற்றோர்..!!!
தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கரன் – பிரித்தி என்ற தம்பதியினருக்கு கெவின் என்ற மகன் உள்ளான். பாஸ்கரநின் மகன் கெவினுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். அந்த வேளையில் கெவினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையின் சடலத்தை மீட்டு சென்று இறுதிச்சடங்கு செய்தனர். அதையடுத்து குழந்தையை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று சவப்பெட்டியில் வைத்த போது கெவினுக்கு அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கெவினை மீண்டும் அதே மருத்துவமனைக்கு தூக்கி சென்று, குழந்தைக்கு உயிர் இருக்கு என்று என பெற்றோர் கூறியுள்ளனர். அங்கு மருத்துவர்கள் மீண்டும் இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன்னர் கெவினின் உயிர் போயுள்ளது என கூற பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து ஆவேசமாகிவிட்டனர்.
இதை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனை முன்னர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.