சிங்கப்பூரில் 930,000 குடும்பங்களுக்கு அடுத்த தவணைக்கான U Save பற்றுச்சீட்டுகள் வழங்கவுள்ளது..!!!
சிங்கப்பூரில் 930,000 குடும்பங்கள் அடுத்த தவணைக்கான U Save பற்றுச்சீட்டுகளை இந்த மாதம் வழங்கவுள்ளன.
நிரந்தரமாக அறிமுகம் செய்யப்பட்ட பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுத் திட்டத்தின் மூன்று அம்சங்களில் ஒன்று U-Save பற்றுச்சீட்டு ஆகும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் அந்தப் பற்றுச்சீட்டின் மூலம் இந்த ஆண்டு சிங்கப்பூரர்கள் பெறவிருக்கும் தொகையின் மொத்த மதிப்பு 300 மில்லியன் வெள்ளி.
சிங்கப்பூர்க் குடும்பங்கள் பொதுப் பயனீட்டுக் கட்டணத்தின் கழிவைப் பெறுவதால், அவர்களின் ஒட்டுமொத்த குடும்பச் செலவைக் குறைக்கவும் U-Save பற்றுச்சீட்டுகள் உதவுகின்றது.
தகுதியுடைய சிங்கப்பூரர்களுக்கு அவர்கள் வாழ்ந்து வரும் வீட்டின் அளவைப் பொறுத்து 100 வெள்ளி வரை பற்றுச்சீட்டு வழங்கப்படும்.