சிங்கப்பூர் நீரிணையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கொள்ளைச் சம்பவம்..!!!
கிறிஸ்துமஸ் தினமான நேற்று சிங்கப்பூரில் நீரிணையில் கடற்கொள்ளையர்கள் கப்பல் ஒன்றைத் தாக்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தையும் சேர்த்து, கடற்கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 30க்கு உயர்ந்துள்ளது. ReCAAP எனும் கடற்கொள்ளைக் குறித்த வட்டாரத் தகவல் வழங்கும் நிலையம் அதை குறிப்பிட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பின் Stena Immortal எனும் எண்ணெய்க் கப்பலில் 6 கொள்ளையர்கள் ஏரியதாய் நிலையம் கூறியது.
ஆயுதம் எதையும் கொண்டுவராத அவர்கள், கப்பலின் இயந்திர அறைக்குள் புகுந்தனர். அதைப் பார்த்த தலைமை பொறியாளர் அபாய ஒலியை எழுப்பிய போது, கப்பலில் இருந்து கொள்ளையர்கள் சிறிய படகில் தப்பிச் சென்றுள்ளனர். கப்பலில் இருந்த அவர்கள் எதையும் திருடவில்லை. அவர்கள் இன்னும் பிடிபடாததால், மேலும் பல கொள்ளை முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என ReCAAP நிலையம் கூறியது. அதனால், சிங்கப்பூர் நீரினையில் பயணம் செய்யும் கப்பல்கள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் இந்த சம்பவம் ஏதும் நேர்ந்தால் அது பற்றியத் தகவலை அருகில் உள்ள நாட்டில் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.