” வனிதா என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டார் ” தயவு செய்து மீட்டுத் தாருங்கள்..வனிதாவின் மூன்றாவது கணவரின் மனைவி பரபரப்பு புகார்..!!
நட்சத்திர குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் நடிகை வனிதா விஜயகுமாரும் ஒருவர். சில திரைப்படங்கள் மட்டுமே நடித்த நிலையில் நடிகர் ஆகாஷுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். இந்த திருமணம் சில வருடங்களில் ஆனந்த ராஜ் என்பவரை திருமணம் செய்து அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.
அதன் பின் வனிதாவின் வாழ்க்கை மாற குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் பீட்டர் போல் என்பவருடன் ஏற்பட்ட காதல் இன்று திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில் பீட்டர் போல் எனது கணவர், என்னையும் என் கணவரையும் வனிதா பிரித்துவிட்டார் என கூறி எலிசபெத் என்ற பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
எலிசபெத் ஹெலன் என்பவருக்கும் வனிதாவின் தற்போதைய கணவர் பீட்டர் போலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 7 வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து எலிசபெத் ஹெலன் கொடுத்துள்ள புகாரில் 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றோம்.
வனிதாவை காதலிக்கும் விடயம் தெரியவந்தபோது நான் இது பற்றி கேட்டேன். அதற்கு முறைபடி விவாகரத்து நான் கொடுத்த பின்பே வனிதாவை திருமணம் செய்வேன் என கூறினார். ஆனால் நான் விவாகரத்து கொடுக்காத நிலையில் அவர் வனிதாவை திருமணம் செய்துள்ளார்.
அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன் மீடியாக்களை சந்தித்த போது வனிதா என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டார் என அழுதுள்ளார். இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து எலிசபெத் இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்துவிட்டு தற்போது புகார் கொடுக்கிறார் என்றால் அவரும் நல்லவர் என்று கொண்டாட முடியாது என கூறி வருகின்றனர்..!!