வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு வாழ்த்து கூறி பூங்கொத்து அனுப்பினாரா வனிதாவின் தந்தை விஜயகுமார்.!? நடந்தது இது தானாம்…!!
நேற்றைய தினம் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் நண்பர்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இடம்பெற்றது. திருமணத்திற்கு தயாரான தாயாரை மூத்த மகளே அழைத்து வந்தார். இரண்டு மகள்களும் கேக் வெட்டி மகிழ்ச்சியாக தாயாரின் திருமணத்தை கொண்டாடினார்கள். இந்த திருமணத்திற்கு நடிகை அம்பிகா வந்திருந்தார்.
மஞ்சுளா விஜயகுமாரின் தோழியான அம்பிகாவிற்கு வனிதா அழைப்பிதழ் கொடுத்தது தாயின் இடத்தில் அவர் இருக்க வேண்டும் என்பதற்காக தான். சிறப்பாக திருமணம் நடந்து முடிந்த பின் வனிதாவின் குடும்பத்தினர் வெறுக்கும் நிலையில் அங்கிருந்து வாழ்த்துக்கள் வந்ததாக செய்திகள் வெளியானது.
அதாவது வனிதாவின் தந்தையான விஜயகுமார் அவர்கள் வனிதாவிற்கு பூக்கொத்து கொடுத்து அனுப்பியதுடன் பூக்கொத்துடன் விஜயகுமார் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியானது.
இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை பற்றி பிரபல மீடியா ஒன்று விஜயகுமாரை தொடர்பு கொண்ட போது அவர் மீடியாக்களை சந்திக்க விரும்பவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொண்டு கேட்ட போது அப்படி எதுவும் என்றும்,
விஜயகுமார் வனிதாவின் பெயரை வீட்டில் உச்சரிப்பதை கூட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். வனிதாவின் பிறந்த வீட்டில் இருந்து இது வரை எந்த வாழ்த்தும் அனுப்பவும் இல்லை அனுப்பவும் மாட்டார்கள் என விஜயகுமார் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்..!!