” பீட்டர் பாலும், அவரது மனைவியும் வனிதாவை ஏமாற்றுகின்றனர் ” பீட்டர் மனைவின் நண்பன் அதிரடி…வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்தது இதற்காக தானாம்..!!
வனிதாவின் திருமணத்தால் பல சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கின்றது. நேற்றைய் தினம் நேரலை வந்த வனிதா, கஸ்தூரி , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் சண்டை பிடித்து தங்களை தாங்களே கேவலப் படுத்திக் கொண்டனர். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில் ஏன் இன்னொருவர் செல்லக் கூடாது.
பீட்டர் பாலின் மனைவி என் கணவரை வனிதா கட்டாயப் படுத்தி திருமணம் செய்துகொண்டார் என ஆரம்பத்தில் கூறி வந்ததால் பீட்டர் பால் மற்றும் வனிதா இணைத்து பேட்டியளித்த போது என் மனைவி கொடுமைகாரி,என்னை கவனிக்கவே இல்லை . தனது சுய நலத்திற்காக என்னை பயன் படுத்தினாள், அவளது எண்ணம் எல்லாம் பணம் தான்.
பணத்தை கொடுத்தால் புருஷன் வேண்டாம் என்று சொல்லும் கேரக்டர் அவர் என கூறி இருந்தார். இதனை பார்த்த பீட்டர் பாலின் மனைவியின் நண்பரான பிரதாப் என்பவரும் இந்த பிரச்சனையில் ஒருவரை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. யார் என்றால் அது வனிதா தான். கஷ்டப் பட்டு தன் குழந்தைகளை வளர்த்து வரும் வனிதாவிற்கு கஷ்டத்தில் ஆறுதல் தேவை பட்டது.
ஆனால் வனிதா தேர்தெடுத்தவர் நல்லவர் அல்ல. குடிபோதையில் கோடி கணக்கு செலவு செய்தவர். குடிக்காக ஏதும் செய்வார். எலிசபெத் தற்போது வனிதாவிடம் சண்டை போடுவது வியக்க வைக்கிறது. எலிசபெத் நகை பணம் எல்லாம் பீட்டரிடம் கொடுத்து விட்டு ஏமாந்து நின்றவர் தான். பீட்டர் பால் வேண்டாம் என எப்பவோ அவர் ஒதுக்கிவிட்டார் .
எலிசபெத்க்கு பீட்டர் பாலின் திருமணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர் தனது நேரத்தை வீணாக்குகிறார். அதே போல் பீட்டர் பாலுக்கு பணம் கொடுக்கும் மரம் கிடைத்துவிட்டது. இதில் வனிதா தான் நம்பி ஏமாறுகிறார்.இவர்கள் வனிதாவை ஏமாற்றுகின்றனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் வனிதா பீட்டர் பாலை ஏற்காமல் இருந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்..!!