வியாழக்கிழமைகளில் 108 முறை ஷீரடி நாயகன் சாய்பாபாவின் இந்த மந்திரத்தை கூறி பூஜை செய்யுங்கள்..! நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும்..!!
“துன்பங்கள் தீர ஷீரடி நாயகன் பாதம் பற்றுதல் சிறப்பு” என்று சொல்லுவார்கள். ஷீரடி சாய்பாபா இவரை மத ரீதியாக எவரும் பிரிப்பதில்லை, எல்லா மதத்திற்கும் பொதுவானவராகவே இவரை பார்க்கின்றனர். ஷீரடி சாய்பாபாவின் அருளை பெற அத்தனை பேரும் விரும்புவார்கள். ஷீரடி நாயகனை வழிபடுவதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் ? எந்த நாட்களில் இவரை வழிபடுதல் சிறப்பு என்பது பற்றி பார்க்கலாம்.
சனிக்கிழமை, மற்றும் வியாழன் அன்று சாய்பாபாவை வழி படலாம். மாய மந்திரங்கள் செய்யாத போதும் ஷீரடி நாயகனின் மகிமையை பலர் உணர்ந்துள்ளனர். குழந்தை இல்லா குறையினால் கணவன் மற்றும் மாமியாரால் கொடுமை படும் பெண்கள் தினமும் மாலை ஷீரடி நாயகனை ”
“ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”
எனும் மத்திரம் கூறி பிரார்த்தித்து வர சீக்கிரமே கொடுமைகளுக்கு விடுதலையாக குழந்தை கிடைக்கும். அல்லது கணவர் மற்றும் மாமியாரின் மனம் மாறும். இந்த மந்திரத்தை 108 முறை கூறி மலர் கொண்டு சாய்பாபா புகைப்படம் அல்லது சிலையை உங்கள் வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பிரார்த்தனையை வீட்டில் வறுமை நீங்க, சண்டை சச்சரவு நீங்கவும் நீங்கள் செய்யலாம்.ஷீரடி நாயகன் நம்பி பிரார்த்தனை செய்யும் யாரையும் கைவிடப் போவதில்லை, குழந்தை மனம் கொண்ட ஷீரடி சாயின்
“ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ” எனும் மந்திரத்தை நோயாளிகள், மற்றும் குழந்தைகள் முன்னிலையிலும் ஓதுங்கள்.இது அனைத்துக்கும் விடுதலை அளிக்கும் மந்திரமாகும்…!!