வனிதா திருமண விடயத்தில் தலையிட்டு கொலை மிரட்டல் விட்டு வந்த சூர்யா தேவி சற்று முன்னர் கைது..!!
வனிதாவை வைத்து தனது யூடியூப் சேனலை பிரபலமாக்க முயன்ற சூர்யா தேவி என்கிற பெண்ணை பொலீஸார் கைது செய்துள்ளனர். 19 வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்த வனிதா ஸ்ரீஹரி, மற்றும் ஜோவிகா என இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் பின் முதல் கணவர் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
பின் ஆனந்த ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரை விவாகரத்து செய்து தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் வனிதாவின் திருமணம் பற்றி பற்றியும் வனிதா பற்றியும் தவறாக பேசியதுடன் வனிதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனை தொடர்ந்து வனிதா பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சூர்யா தேவி சற்றுமுன்னர் கைது செய்யப் பட்டார். பிரபலமாக வேணும் என்றால் எத்தனையோ நல்ல வழிகள் இருந்தும் குறுக்கு வழி தேடினால் இப்படி தான் என விமர்சித்து வருகின்றனர்..!