பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப் பட்டதற்கு உண்மை காரணம் இது தான். மக்களின் வாக்குகள் என ஏமாறாதீர்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வனிதா விஜயகுமார் வெளியேற்றப் பட்டார். நேற்றைய தினம் மோகன் வைத்யா காப்பாற்றப் பட்ட பின் இன்று சரவணன் காப்பாற்றப் பட்டார். அதனை தொடர்ந்து மதுமிதாவும் காப்பாற்றப்பட மிச்சம் இருந்தது மீரா மற்றும் வனிதா தான். இதில் மீரா தான் வெளியே செல்வார் என போட்டியாளர்கள் எதிர்பார்த்திருக்க வனிதா வெளியேற்றப் படுகின்றார் என அறிவிக்கப் பட்டது.
இதனால் போட்டியாளர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள். இதில் முகென், கவின், இருவரும் சீக்ரட் ரூமிற்கு அனுப்பி வைப்பார்கள் என கூறினார்கள். ஆனால் வனிதா மேடைக்கு வந்துவிட்டார். சரி வனிதாவின் இந்த வெளியேற்றம் ஏன் எதற்காக.? பலரும் மக்களின் வாக்குகளால் தான் வனிதா வெளியேறிவிட்டார் என நினைத்துக் கொண்டிருக்க இதன் பின் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது.
வனிதா மீது அவரது கணவர் குழந்தை கடத்தல் புகார் கொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே வீட்டிற்குள் சென்று பொலீஸார் விசாரணை நடத்தினார்கள். குறித்த வழக்கில் வனிதாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான காரணம் வனிதாவின் குழந்தை தந்தை பற்றி கொடுத்த வாக்குமூலம்.
அதாவது தனது தந்தை நண்பர்களை வீட்டிற்கு கூட்டி வருவதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.அத்துடன் அம்மா தன்னை கடத்தவில்லை நான் விரும்பி தான் வந்தேன் என வாக்குமூலம் கொடுத்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
வழக்கிற்கு வனிதா செல்லாவிட்டால் வனிதாவின் கணவர் ஆனந்த ராஜனுக்கு சார்பாக வழக்கு திசை திரும்பும். அதனால் வெளியேற்றம் என்ற பெயரால் தற்போது வனிதா வெளியே செல்கிறார். இது தான் உண்மை காரணம்..!!