ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இம்முறை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற போட்டியாளர் இவர் தான்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தில் இருக்கிறது. வீட்டிற்குள் சண்டை சமாதானம் காதல், என ஓடிக் கொண்டிருகின்றது. இந்த நிலையில் நேற்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை கூற கமலஹாசனும் தனது கருத்தை பகிர்ந்துகொண்டார். இந்த நிலையில் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே நேற்று நடந்த விடயங்கள் கமலஹாசனின் காதுகளுக்கு செல்ல சென்றுவிட இன்று அதை பற்றி கேட்கின்றார் கமலஹாசன். அதாவது மீராவை தர்சன் திருமணம் செய்துகொள்ள பிரப்போஸ் செய்ததாகவும் அதனை தான் ஏற்றுக் கொண்டதாகவும் மீரா சாக்ஷியிடம் சொல்ல, சாக்ஷி செரினிடம் சொல்ல, செரின் தர்சனிடம் சொல்ல தர்சனோ ஐயோ நான் அப்பிடி ஒரு விடயத்தை செய்யவே இல்லை என்கிறார். அன்றைய நிகழ்ச்சி நாமும் பார்த்தோம் தர்சன் தனக்கு காதலி வெளியே இருக்கிறார் என தெளிவாக சொல்கிறார்.
இந்த நிலையில் இது பற்றி கமலஹாசன் கேட்கும் போது தர்சன் அதையே சொல்கிறார். இ்து இன்றைய ப்ரோமோவாக இருக்க இன்னுமொரு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது இன்று மதுமிதா, சரவணன், மீரா, வனிதா ஆகியோரில் இன்று வெளியேறுவது வனிதா தானாம். வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் மட்டுமே நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் வனிதாவை வெளியேற்றுவது வியப்பாக இருந்தாலும் ரசிகர்கள் வனிதாவிற்கு வாக்களிக்கவில்லை.
பிக் பாஸ் டீம் ரசிகர்களுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற குறையை நீக்க இம்முறை வனிதாவை வெளியேற்றி உள்ளது என நினைக்கலாம். வனிதா வெளியேறினால் சில நேரம் நிகழ்ச்சியின் டி ஆர் பி குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கண்டிப்பாக இம்முறை வனிதாவின் வெளியேற்றத்திற்கு கமலஹாசனும் காரணமாக இருக்கலாம். !