இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவித்தல்..!!
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வாழும் மக்களுக்கு காணி உறுதி வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அப்பாவி பொது மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கடமையாகும் என்றும் அதற்கான செயல்திறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்றையும் வகுக்க உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இதனை தொடர்ந்து அரசாங்கம் வீடு மற்றும் காணி உறுதிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் கிராம மக்களின் கனவு நிறைவேறும் என பிரதமர் கூறியுள்ளார். காணி உறுதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல ஆண்டுகளாக அந்தக் காணிகளில் வாழ்ந்து வந்த போதிலும் அவற்றுக்கு அரச ரீதியிலான எந்தவொரு உறுதிப்பத்திரங்கள் இருக்கவில்லை என்றும் கூறினார்.
மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் உதவி செய்துள்ளனர். காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகவும் அவர் கூறினார். பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமையற்று வாழும் கண்டி மக்களுக்கு ஆயிரம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
மேலும் இந்த நாவலபிட்டி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது