வனிதாவை ஏமாற்றி மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்த பிக் பாஸ் டீம்..! நடந்தது இது தானாம்..!
மக்களால் வெளியேற்றப் பட்டு wildcard வரவு மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே யாரையுமே மதிக்காத வனிதா சண்டை மட்டுமே போட்டு வந்தார் இதனால் கடுப்பான மக்கள் வீட்டிற்கு அனுப்பிய பின் மீண்டும் அவரை வீட்டிற்குள் கொண்டுவந்தது விஜய் டிவி. வீட்டிற்குள் வந்த வனிதா பலரை வெளியே அனுப்பினார்.
குறிப்பாக மது, அபிராமி, கஸ்தூரி, போன்றோரை அனுப்பி வைத்தார். இவரால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கிடைத்தது. சரி வனிதா ஏன் மீண்டும் வந்தார்.? இது பலரது கேள்வியாக இருந்தது. வனிதாவிற்கு பிக் பாஸ் வந்தால் மீண்டும் கெட்ட பெயர் தான் கிடைக்கும் என்பது நன்றாகவே தெரியும் அப்படி தெரிந்தும் ஏன் வந்தார்.?
வனிதாவிற்கு freeze டாஸ்கில் அவரது மகன் ஸ்ரீஹரியை அழைத்து வருவதாக உறுதியளித்துள்ளது. மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த வனிதா மகனை பார்க்கும் ஆசையில் வீட்டிற்குள் வந்தார். ஆனால் விஜய் டிவி எவ்வளவு முயற்சி செய்தும் ஸ்ரீஹரியை அழைத்து வர முடியவில்லை.
ஸ்ரீஹரி வர மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது இரண்டு மகள்களையும் டீம் அழைத்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஏமாற்றம் அடைந்த வனிதா நேற்றைய தினம் இது குறித்து கமலஹாசனிடமும் பேசியுள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..!