இதற்காக தான் என் கையை அறுத்தேன்..! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுமிதா முதல் முதல் கூறியது இது தான்..!
பிக் பாஸ் வீட்டில் மக்களுக்கு.பிடித்தவராக இருந்து பிடித்தவராகவே வெளியேறியவர் மதுமிதா.சந்தானத்தின் ஜாங்கிரி பூந்தியாக மக்கள் மனதில் இடம்பிடித்த மதுமிதா அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். சீரியல்களிலும் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்திருந்த இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
காதல் திருமணம் செய்த இவர் மூன்றே மாதத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீட்டிற்குள் தைரியமாக இருந்த மதுமிதா திடீரென கடந்த வியாழன் அன்று கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
இது தொடர்பாக முதல் முதலில் மதுமிதா பேசியுள்ளார். அதில் நான் மிகவும் தைரியமான பெண். எதையும் நேராக எதிர்ப்பேன். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இரும்பால் ஆன பெண் சென்றாலும் உடைத்து நொறுக்கி விடுவார்கள். என் கருத்தை தான் வெளிப்படுத்தினேன் ஆனால் என்ன என்னை அடி மட்டத்தில் போட்டு கேவலமாக திட்டி தீர்த்தார்கள்.
முட்டாள் என்றதுடன் கீழ் தரமான பெண்ணாக சித்தரித்தார்கள். என்னால் ஓரளவிற்கு மேல் முடியவில்லை. அது தான் என்னை நிரூபிக்க நான் என் கையை வெட்டினேன். நான் கீழ் தரமானவள் இல்லை என்பது இதன் மூலம் நிரூபனமானது என குறிப்பிட்டார்..
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.