வரும் 27ம் திகதி தனது திருமணத்தை வைத்தது இதற்காக தான்.! நடிகை வனிதா பேட்டி..!!
கடந்த சில நாட்களாக ரசிகர்களிடம் சிக்கி கலாய்க்கப் பட்டு வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பிரிந்த நிலையில் லிவிங் டுகெதர் வாழ்த்து வந்தார். அதன் பின் எதுவும் வேண்டாம் என குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்.
வனிதாவிற்கும் பீட்டர் போல் என்பவருக்கும் வரும் 27ம் திகதி திருமணம் இடம்பெற இருக்கும் நிலையில் ஏன் 27ம் திகதியை திருமணத்திற்காக தேர்ந்தெடுத்தேன் என வனிதா விளக்கம் கொடுத்துள்ளார். திருமணம் செய்யலாமா வேண்டாமா என அம்மாவின் புகைப்படத்தின் முன் இருந்து யோசித்தேன்.
அப்போது அம்மாவின் ஆசி கிடைத்தது போல் உணர்ந்தேன், திடீரென பார்த்த போது 27 ம் திகதி என் கண்ணில் பட்டது. ஏன் 27ம் திகதி என யோசித்த போது அன்று தான் என் அம்மா ,அப்பாவின் திருமண நாள் அது தான்.
தனது திருமண நாளை எனது திருமண நாளாக என் அம்மாவே தேர்வு செய்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது..இதனால் பீட்டருடன் பேசி இதே நாளில் திருமணம் வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்..!!