முன் நெற்றியில் வழுக்கையா.? முடி வளர வேண்டும் என்ற ஆசை இருக்கா.? அப்பிடீன்னா இதை செய்து பாருங்கள்..!!
முடி உதிர்தல் என்பது தற்போது சாதாரண விடயமாக உள்ளது. சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் இலகுவாக இந்த முடி உதிர்வு தாக்கிவிடுகிறது. இதில் முன் நெற்றியில் முடி உதிர்ந்துவிட்டால் வயது போன தோற்றம் வந்துவிடுகிறது. இன்று நாம் பார்க்கப் போவது முன் நெற்றியில் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்று தான்.
இந்த மருத்துவம் முடி உதிர்வை தடுப்பதுடன் முடி வளர்வதற்கும் உதவுகிறது. முதலில் வெங்காயம்: இதில் சல்பர் அடங்கியுள்ளதை நாம் அறிவோம். இது முடி வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. முதலில் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பின் இந்த சாற்றை முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆரம்பித்து தலை முழுவதும் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
பின் அரை மணி நேரம் விட்டு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் கொத்தமல்லி இலைகள் முடி வளர்வதற்கு மிகவும் உதவுகிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதனை முன் நெற்றி முதல் தலைவரை நன்றாக பூசி மசாஜ் செய்யுங்கள். அப்படியே 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பின் ஷாம்பு போட்டு கழுவி விடுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வது முற்றிலும் நின்று புது முடிகள் வளர ஆரம்பித்துவிடும். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்..!!