நடிகர் விஜயகாந்தை காதலித்து ஏமாற்றிய பிரபல நடிகை ! இவருக்காக விஜயகாந்த் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் கேப்டன் என அனைவராலும் மரியாதையாக அழைக்கப் பட்டவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் இருந்த வரை நடிகர் விஜயகாந்தின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. நடிப்பிலும் சரி குணத்திலும் சரி அவரை வெறுக்க யாரும் இருக்கவில்லை, ஆனால் அரசியலுக்கு சென்ற பின் அவரை கேலி கிண்டல் செய்தனர். நேர்மையான நல்ல மனிதரை கேலி கிண்டல் மூலம் காமெடியாக்கினார்கள். இதற்கு முக்கிய காரணம் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தான்,
நடிகர் விஜயகாந்த், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜயகாந்தை பல நடிகைகள் காதலித்தனர். ஆனால் எதிலும் விஜயகாந்த் அவர்கள் சிக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் காதலித்த நடிகை விஜயகாந்தை ஏமாற்றினார். நடிகர் விஜயகாந்துடன் தூரத்து இடிமுழக்கம் திரைப்படத்தில் நடித்தவர் பூர்ணிமா.
இந்த திரைப்படத்தின் பின் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பூர்ணிமாவிற்காக வீடு ஒன்றை பரிசளித்த விஜயகாந்த் பெற்றோல் பங் ஒன்றையும் அவருக்காக வாங்கிக் கொடுத்தார். அனைத்தையும் பெற்றுக் கொண்ட பூர்ணிமா பின் அவரை விட்டு பிரிந்துவிட்டார். இந்த சோகத்தில் இருந்த விஜயகாந்தை நடிகை ராதிகா காதலித்த போது அதற்கு நோ சொல்லிவிட்டார்.பின்னர் வீட்டில் பார்த்த பெண்ணான பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார்.
தன்னை ஏமாற்றிச் சென்ற பெண்ணை பற்றி எப்போதும் தவறாக விஜயகாந்த் பேசவில்லை, ஆனால் காதல் இருந்தது என்பதை கூறிவிடுவார். பூர்ணிமா வேறு ஒரு நபரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.!!