“முப்பையில் மிகப் பெரிய பணக்காரி ஆகப் போகிறேன்” இனி என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறிய பெண் மரணம்.!!!
24 வயதான இளம் பெண் ஒருவரின் மரணம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோட்வாலி பகுதியில் வசித்து வந்தவர் பாவனா கெளதம். இவர் மாடலிங் மற்றும் நடிப்பில் அதிக ஈடுபாடு இருந்ததால் மும்பையையில் தங்கி மாடலிங் செய்து வந்தார். 24 வயதான பாவனா கவுதமுக்கு சினிமா துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது,
ஆனால் கொரோனா அவரது ஆசைக்கு தடை விதித்தது. கொரோனாவால் மாடலிங் வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையில் வாழ முடியாது என்று நெய்டா வந்துள்ளார் பாவனா. வரும் போது தனது காதலனையும் அழைத்து வந்து அம்மாவிடம் அறிமுகப் படுத்தி பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். பாவனாவின் செயல்பாடுகளால் கோபமடைந்த அவரது தாயார் பாவனாவையும் அவரது காதலனையும் திட்டியுள்ளார்.
இதனால் பாவனாவின் காதலன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். சில மணி நேரங்கள் தாயுடன் பேசாமல் இருந்த பாவனா 14வது மாடிக்கு சென்று குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.பொலீஸ் விசாரணையின் போது பாவனாவின் டயரி சிக்கியுள்ளது. இதில் எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது,
நான் மிகப் பெரிய பணக்காரி ஆகக் போகிறேன் மும்பையில் என் காதலனுடன் மகிழ்ச்சியாக வாழப்போகிறேன், என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த போலிசார் பாவனா அதிர்ஷ்டம் என காதலனை கூறி இருக்கலாம்,தாயார் திட்டியதால் ஏமாற்றம் ஏற்படலாம் என்று தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.!