பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விஜய் தொலைகாட்சியின் செல்லப் பிள்ளையான ஆண் அறிவிப்பாளர்..! அவரே கூறிய விடயம்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆக்டோபர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது. இந்த தகவல் உறுதியான தகவலாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் சிலர் தாங்கள் கலந்துகொள்வதை உறுதிபடுத்தி வருகின்றனர்.
அண்மையில் பிகில் அம்ரிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதை உறுதிபடுத்தியுள்ள நிலையில் தற்போது இன்னுமொருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதை உறுதி படுத்தியுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறாராம்.
ஜாக்குலினுடன் கசமுசா என கிசுகிசுக்கப் பட்ட ரக்ஷன் பின் ஜூலியின் காதலன் என கூறப் பட்டார். ஆனால் காதல் இல்லை இது நட்பு என இருவரும் மறுத்தனர். பின் திரைப்பட வாய்ப்பு கிடைக்க நடித்து வந்த ரக்ஷன் சில நாட்களாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை.
இதனால் ரசிகர்கள் ஏன் எங்கே போனீர்கள் என்ற கேள்விக்கு உங்கள் வேறொரு நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க போகிறேன் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரக்ஷன் பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என கிசுகிசுக்கப் பட்டு வந்த நிலையில் தற்போது அவரே இதனை உறுதி படுத்தியுள்ளார்..!!