திடீரென நடந்து முடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் மற்றும் நடிகையின் திருமணம்.! இதோ வைரலாகும் புகைப்படங்கள்.!!
தொலைக்காட்சி சீரியல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். ரோஷினி ஹரிப்பிரியன் நடிப்பில் டி ஆர்பியில் முன்னிலையில் இருந்தது. இடையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட ரோஷினி சீரியலை விட்டு விலகினார்.
தற்போது புதுமுகம் ஒருவர் ரோஷினியாக நடித்து வருகின்றார். வில்லியாக நடித்த பரீனாவிற்கும் குழந்தை பிறந்ததால் அவர் தற்போது ஜெயிலில் இருப்பது போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று வில்லத்தனம் தான்..
இதில் வில்லி வெண்பாவை மிரட்டிய கேரக்டர் துர்க்கா தான். வெண்பாவை பழி வாங்க பல செயல்களை செய்த பின் துர்க்கா என்ற கதாபாத்திரமே காணாமலே போனது. இந்த நிலையில் காணாமல் போன துர்க்கா என்கிற பிரவீன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
ராஜா ராணி சீசன்1 ல் நடித்த நந்தினியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.!!