சிறுவர்களுக்கு வாட்ஸப்பை தடை செய்த ஐரோப்பா
சமீப காலமாக வாட்ஸப் மெசேஞ்சர் சேவை உலகம் முழுவதும் பிரபலமாகி வந்ததும், அதை தொடர்ந்து அந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியிருந்தமையும் அனைவருமே அறிந்த செய்திதான்.
வாட்ஸப் சேவையினை பயன்படுத்துபவர்களின் ஆகக்குறைந்த வயது எல்லை 13 ஆக இருந்த நிலையில் ஐயோப்பா புதிய சட்ட விதிமுறையினை அமுல்படுத்தியுள்ளது.
அதன்படி இனிமேல் ஐரோப்பாவில் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாட்ஸப் இனை பயன்படுத்தலாம் என்ற சட்டம் அமுலாகியுள்ளது.
இருப்பினும் ஐரோப்பாவிற்கு வெளியே தனது குறைந்த வயது எல்லையினை 13 ஆகவே பேணிவருகிறது வாட்ஸப்.