“என்னை மன்னித்து விடுங்கள்.. இதற்காக தான் திடீர் திருமணம் செய்துகொண்டேன்” காமெடி நடிகர் யோகி பாபு கொடுத்த பரபரப்பு பேட்டி..!!
2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நடிகர் யோகி பாபுவின் திருமணம் நடந்து முடிந்தது. துணை நடிகர், அடி ஆள், காமெடி நடிகர் என நடித்து இன்று முன்னணி ஹீரோக்கள் மட்டும் இன்றி முன்னணி ஹீரோயின்களுடனும் நடிக்கும் யோகி பாபு தனக்கான தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் பதித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக யோகி பாபுவிற்கு திருமணம் என வதந்திகள் பரவ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களின் குலதெய்வ கோயியில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் திருமணம் இடம்பெற்றது.
இந்த நிலையில் இன்று மீடியாக்களை சந்தித்த யோகி பாபு அனைவரிடமும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். திருமணத்தை அனைவருக்கும் சொல்லி பிரமாண்டமான முறையில் நடத்த விரும்பினேன். ஆனால் திடீரென ஏற்பட்ட பிரச்சனைகளால் உடனடியாக திருமணம் செய்துகொண்டேன்.
யாரையும் அழைக்கவில்லை. நிச்சயம் மார்ச் மாதம் திருமண அழைப்பு விழாவாக பிரமாண்டமான முறையில் நடத்த முடிவு செய்துள்ளேன்.. கண்டிப்பாக உங்கள் அனைவரையும் அழைப்பேன் என தெரிவித்துள்ளதுடன் திடீர் திருமணம் செய்து கொண்டமைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.