நள்ளிரவில் பெண்ணை சீண்டும் கயவர்கள்… பொலீஸாரை நாடும் பெண்..!! ஒரு நிமிடம் பாருங்கள்..கண்டிப்பாக பகிருங்கள்.. !!
நவீனத்தை தேடி உலகம் நகர்ந்துகொண்டிருக்க மனிதன் மிருகமாகிக் கொண்டிருக்கின்றான். கொலை, தற்கொலை, கற்பழிப்பு, பாலியல் சீண்டல்கள், இப்படி ஏராளமானவை உலகத்தை சூழ்ந்துகொண்டுவிட்டது. மக்களை காப்பாற்ற வேண்டிய நீதி நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
சட்டம் படித்தோம் என்பவர்கள் சிலரே சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதை விட்டுவிட்டு தாங்களாக சட்டம் இயற்றிக் கொள்கின்றனர். மக்களுக்கு சட்டம் பற்றிய தெளிவு இன்றளவும் இல்லாமல் இருக்கிறது. இதனை கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த ஒன்றின் மூலம் எடுத்துச் சொல்லலாம்.
அதற்கு சினிமா சரியான வழி தான். அதனை நன்றாக புரிந்துகொண்ட குறும்பட இயக்குனரான ராஜராஜேஸ்வரன் தனது 7 நிமிட குறும்படத்தின் மூலம் தெளிவு படுத்தியுள்ளார். “Zero fir” என்ற இந்த short film பெண்கள் எங்கு பாதிக்கப் பட்டாலும் அருகில் இருக்கும் பொலீஸில் புகார் அளிக்கலாம்..
என்பதையும் இது எங்கள் பொலீஸ் எல்லைக்குள் இல்லை என்று சொல்லும் பொலிஸாரின் வாயை அடைக்கும் சட்டம் என்றும் தெளிவாக கூறியுள்ளார். இது பற்றிய முழுமையான விளக்கத்தை வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.. !!