ரெஜினாவின் கொலைக்கு நீதிகிடைக்கக் கோரி மகளிர் அமைப்புக்கள் போராட்டம்.
தொடரும் சிறுபெண்குழந்தைகளின் கொலைகளுக்கு நீதி கிடைக்காமலேயே பொய் வருகின்ற சூழ்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை ) காலை 9.30 மணி தொடக்கம் யாப்பாணம் மகளிர் அமைப்புக்கள் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொல்லப்பட்ட முதலாமாண்டில் கல்வி கற்ற சிறுமி ரெஜினாவின் கொலைக்கு நீதி கிடைக்கக் கோரி கண்டனப் பதாகைகள் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டமானது 11.30 வரை இடம்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் மகளிர் விவகார பிரிவுகள், மகளிர் அமைப்புக்கள், பல்கலைக் கழக மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், கிறிஸ்தவ திருகி சபை சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறுமியின் கொலைக்கு எதிராகத் தங்களுடைய கண்டணத்தைப் பதிவு செய்துள்ளனர்.
யார் நகரில் இன்று ஹர்த்தால் அனுசந்திக்கக் கோரி அது இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டமானது சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது.