ஆப்பிள் நிறுவனத்தின் முதன்முதல் உருவாக்கப்பட்ட கணினி 2 கோடிக்கு ஏலத்தில் விற்பனை!
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனமானது அதிக லாபத்தை ஈட்டுகின்ற நிறுனங்களில் ஒன்றாகவும் உள்ளது. அதன் புதிய தொழில்நுட்ப சாதனங்களின் விலையானது தரத்திற்கு ஏற்றாற்போல் எகிறிக்கொண்டே செல்கின்றது. தற்போது பார்க்கப்போவது புதியசாதனத்தைப் பற்றியது அல்ல. மிகப்பழைய ஆப்பிள்கணினி ஒன்றின் விற்பனை பற்றியது.
ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கணினியானது சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணினியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஏப்ரல் 1976 ஆம் ஆண்டு உருவாக்கி விற்பனைக்கு வந்தது.
இதை ஆதாரமாகக் கொண்டே அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பலவும் உருவாகி வருகின்றன. இந்தக் கணினியானது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தின் ஆரம்பத்தில் இதன் விலையானது 666.68 அமெரிக்க டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”