இன்றைய ராசி பலன் – 07.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 07-01-2021, மார்கழி 23, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 11.58 வரை பின்பு தேய்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.46 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பகல் 03.46 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:
ல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிரிகள் பணிந்து வருவார்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தினருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
திருமண முயற்சிகளில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சிம்ம ராசி அன்பர்களே:
சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள்.பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும்.வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
கடன் சுமை ஓரளவு குறையும்.குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாராசி உறவுகளே:
சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.குடும்பத்தில் சண்டை ,சச்சரவுவந்து நீங்கும். சக வியாபாரி களால் மறைமுக தொல்லைகள் ஏற்படக்கூடும்.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
கடன் பிரச்சினைகள் தீரும்.பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விற்பனை எப்போதும்போலவே நடைபெறும்.உடல் அசதி சோர்வு வந்து விலகும்.
தனுசு ராசி அன்பர்களே:
சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல் வது நல்லது.திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகர ராசி காரர்களே:
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது.உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கும்ப ராசி உறவுகளே:
தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.கண வன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. உத்தியோக ரீதியான பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது.உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.நண்பர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.