இன்றைய ராசி பலன் – 28.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 28-02-2021, மாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 11.19 வரை பின்பு தேய்பிறை துதியை. பூரம் நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்
ரிஷப ராசி அன்பர்களே:
ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும்.தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
மிதுன ராசி காரர்களே:
பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அலட்சியம் வேண்டாம்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.சிக்கனமாக செயல்படுவது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே:
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் சண்டை சச்சரவு வந்து நீங்கும்.வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி ராசி காரர்களே:
பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகள் அதிகரித்தாலும் மகிழ்ச்சியே உண்டாகும்.தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
துலாராசி உறவுகளே:
பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.மற்றவர்களுக் குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும்.
தனுசு ராசி அன்பர்களே:
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:
ராசிக்கு மாலை 03.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.பயணங்களில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வேலைகளை பார்க்க வேண்டி வரும்.தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப் படுத்தும்.
கும்ப ராசி உறவுகளே:
ராசிக்கு மாலை 03.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம்.திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
மீன ராசி நேயர்களே:
சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிட்டும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.