இன்றைய ராசி பலன் – 03.09.2021
இன்றைய பஞ்சாங்கம், 03-09-2021, ஆவணி 18, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.44 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.42 வரை பின்பு பூசம். சித்தயோகம் மாலை 04.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:சகோதரர்கள் தங்கள் அலுவலக விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள்.கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.
ரிஷப ராசி அன்பர்களே:சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள்.
மிதுன ராசி காரர்களே:நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும்.குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்துக் காத்திருந்த சுபச்செய்தி ஒன்று கிடைக்கக்கூடும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். தேவையான பணம் இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு கையிருப்பைக் குறைக்கும்.உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும்.உற்றார் உறவினர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனு மதிக்க வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும்.
கன்னி ராசி காரர்களே:இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.குடும்பத்தினர் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பிற்பகலுக்குமேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களிடம் கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும்.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
துலாராசி உறவுகளே: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.தேவையான பணம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.தாய்வழி உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் விற்ப னையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய் வார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.பிள்ளைகளின் பணிகளில் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப் பெயர் நீங்கும்.கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு காலை 10.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
மகர ராசி காரர்களே:மனைவி வழி உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்ப ராசி உறவுகளே:விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.உடல்நலனில் கவனம் தேவை.அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.