இன்றைய ராசி பலன் – 10.10.2021
இன்றைய பஞ்சாங்கம், 10-10-2021, புரட்டாசி 24, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அனுஷம் நட்சத்திரம் பகல் 02.44 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம்.பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ரிஷப ராசி அன்பர்களே:ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மனைவி வழியில் மதிப்பு கூடும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
மிதுன ராசி காரர்களே:சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:ணப்பற்றாக்குறையை சாமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும் பத்தினர் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
கன்னி ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம்.குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும்.திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.பேச்சில் முதிர்ச்சி தெரியும்.
துலாராசி உறவுகளே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும்.குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பயணங்களினால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே: சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மகர ராசி காரர்களே:உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக் காக செலவு செய்யவேண்டி வரும்.நம்பிக்கைக் குறியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கும்ப ராசி உறவுகளே:சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
மீன ராசி நேயர்களே:
சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.தெய்வ வழிபாடு செய்வது நல்லது.