பூவே பூச்சூடவா சீரியல் இருந்து ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் விலகியதற்கான உண்மை காரணம் இது தானாம்..!
ஜீ தமிழ் டிவியில் மக்களின் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பூவே பூச்சூடவா. இந்த சீரியல் சுமார் 1 வருடத்தை கடந்து ஓடிக் கொண்டிருந்தாலும் மக்களுக்கு இந்த சீரியல் மீது வெறுப்பு ஏற்படவில்லை.
தகாத காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் இருந்து பார்க்க முடியுமானதாக “பூவே பூச்சூடவா” சீரியல் இருப்பதே இதற்கான காரணம். ஜீ தமிழில் நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் திரையில் அறிமுகமான ரேஷ்மா மற்றும்
சரவணம் மீனாட்சி ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் இருவரும் இந்த சீரியலில் நடித்து வந்தனர். இந்த நிலையில் குறித்த சீரியலில் இருந்து தினேஷ் விலகியுள்ளார். தினேஷுக்கு பதில் வேறு ஒருவர் நடிக்கிறார்.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன் மீண்டும் தினேஷை நடிக்க கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்த தினேஷ். என் வாழ்க்கையை மகிழ்ச்சியான பாதைக்கு திருப்பிய பெருமை ஜீ தமிழ் டிவிக்கும் பூவே பூச்சூடவா சீரியலுக்குமே உரியது. அதனால் தான் உங்களை போன்ற ரசிகர்கள் கிடைத்தார்கள்.
ஜீ தமிழுக்கு கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது. நானும் என் மனைவியும் இணைந்து புதிய சீரியல் ஒன்றை இயக்கி நடிக்கிறேன் அதனால் தான் விலகினேன். சீரியல் ஒன்றில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.!