சிங்கப்பூரில் Formula 1 இரவு நேர கார்ப் பந்தயத்தை முன்னிட்டு 7 நாள்களுக்கு மூடப்படும் சாலைகள்…!!!
சிங்கப்பூரில் Formula 1 இரவு வேளையில் இடம்பெறும் கார்ப் பந்தயத்துக்காக அடுத்த மாதம் மரினா செண்டர், பாடாங் போன்றவற்றை சுற்றியுள்ள சாலைகள் 7 நாள்களுக்கு மூடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
12 ஆவது Formula 1 சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயம் செப்டம்பர் மாதம் 20 திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெறும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ஏதுவாக செப்டம்பர் 18ஆம் திகதியில் இருந்து சாலைகள் மூடப்படும்.
செப்டம்பர் 24ஆம் திகதி காலை ஐந்தரை மணி வரை அது நீடிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டுநர்கள் முன்னதாகவே பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பாதிக்கப்படும் சாலைகள் பந்தயத்துக்குப் பிறகு கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.
பந்தயம் நடைபெறும் நாள்களில் பெருவிரைவு ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து குறிப்பிட்ட சில உள்பேருந்துச் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்படும்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.