தமிழக பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய உளவுத்துறை…..!!!
இந்தியாவின் தமிழகத்தில் ஆறு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் பொலிஸாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக தமிழகத்திற்கு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணி இடம்பெற்று வருகிறது. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.