விவாகரத்து செய்தும் மனைவியை பழி வாங்கிய கணவன்..!!
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய சதீஷ் என்பவர் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியாக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நமிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.
பின்னர் சதீஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சதீஷிக்கு தனது முதல் மனைவியான நமிதா மீது மிகுந்த கோவமாக இருந்தார். இதனால் நமிதாவை பழிவாங்க சதீஷ் எண்ணியுள்ளார். பின்னர் முதல் மனைவியான நமிதாவுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் போலி கணக்கை தொடங்கி அதில் பதிவிட்டார். அது மாத்திரமன்றி நமிதா தனியாக இருக்கும் ஆபாச புகைப்படங்களையும் வெளியிட்டார்.
சமூகவலைதளங்களில் உசாடிவரும் தனது புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நமிதா இது தொடர்பாக பொலிஸாருக்கு புகார் அளித்தார். இது தொடர்பாக பொலிசார், சைபர் கிரைம் அதிகாரிகளுடன் நடத்திய விசாரணையில் நமிதாவின் கணவர் சதீஷ் தான் இப்படி ஒரு கேவலமான செயலை செய்தார் என்பது தெரியவந்தது.
மேலும் சதீஷின் தொலைபேசியை வாங்கிப் பார்த்த போது அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.