அமைச்சர் சஜித் பிரேமதாச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ஸ்ரீலங்காவில் சிறு ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளின் வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்குடன் அவர்களின் பயிர்களுக்கு அதிக விலையை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் நவம்பர் மாதம் ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டம், வெலிகேபொல – ஹடங்கல பிரதேசத்தில் உள்ள கிராமத்தை மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அது மாத்திரமன்றி மக்களின் பணத்தில் வாழும் ஜனாதிபதியாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன் எனவும் மாளிகை வாழ்வை நான் முற்று முழுதாக இல்லாமல் ஒழிப்பேன் என்றும் இப் புனித மண்ணில் கால் பதித்து வருடத்தில் 365 நாட்களும் ஒவ்வொரு 24 மணிநேரமும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அரசியல்வாதிகள் வாழுகின்ற சொகுசான வாழ்க்கை மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது. அரசியல்வாதிகள் தீர்மானங்களை எடுக்கும் போது அது மக்களின் துயரங்களை புரிந்துக்கொண்டு, மக்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டும்.
நான் மற்றவர்களின் பணத்திற்கோ அல்லது சிறப்புரிமைகளுக்கோ ஒரு போதும் அடிபணிய மாட்டேன். என்னை இவ் அரசியலில் கையாளாக பயன்படுத்த எவருக்கும் இடமளிக்க மாட்டேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.