நாட்டின் காலநிலை மாற்றம்..!!
இலங்கையில் பல பகுதிகளில் இன்றைய தினம் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடமத்திய மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு அதிகமான கடுமையான காற்று வீசக்கூடும்.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் அளவில் காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் நாளையதினம் காலை 8 மணி வரையில் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல் பயணங்கள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இதே வேளையில் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மவட்டங்களிலும் 100 மில்லமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்றும், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.