வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு…!!!
வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியிலிருந்து இன்றைய தினம் பொலிஸாரால் வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக வவுனியா தட்சணாங்குளம் கோவில்புதுக்குளம் பகுதியில் உள்ள குளக்கட்டு வேலை நடைபெற்று வந்துள்ளது. இன்று அந்த பகுதிக்கு பெகோ வாகனத்தை கொண்டு சென்ற போது குழி ஒன்று காணப்பட்டுள்ளது. அக் குழியை மூடிக்கொண்டிருக்கும் போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அவதானித்ததை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த பகுதியை சோதனை இட்டத்தில் டெட்டனேற்றர் குச்சி 2, அதற்கு பயன்படுத்தப்படும் 100மீற்றர் வயர் ரோல் போன்றவை காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மண்ணில் புதைந்து இருந்த வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.