ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…!!!
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். புனித பூமியான யாழ் குடா நாட்டில் நீண்ட கால பிரச்சனைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை பெறும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள மாற்று குடிநீர் திட்டத்தின் முக்கிய அங்கமான வல்லை குளத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாட்டவுள்ளார்.
4 வருட கட்டுமான பணியின் பின் குள அமைப்பு பூரணமாகும். இதன் பின்னர் வல்லை நீரேரியில் சேரும் நீரை குளத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு, பாவனைக்கு வழங்கப்படும். இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டுவார்.
மேலும் அவர் நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா வழிபாடுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார். அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்தை முன்னிட்டு முன்னரை விட யாழ்ப்பாணத்தில் அதிகளவான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதிபர் பங்கேற்கும் நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களில் போக்குவரத்து பாதைகளிலும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறிய இடைவெளியில் வீதியின் இருமருங்கிலும் நேற்று மதியம் முதல் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
அதை விட மைத்திரி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகள் முழுமையாக இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுதவிர, ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு பகுதிகள் முழுமையாக இராணுவத்தின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், ஜனாதிபதி கொலை சதி முயற்சி இதனை குறிப்பாக கொண்டு இந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.