தமிழகத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை…!!! காரணம் என்ன தெரியுமா???
திருநெல்வேலியில் உள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்ற இளைஞனுக்கும் ஷாலினி என்ற இளம் பெண்ணுக்கும் 07 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் முடிந்த நாள் முதலே வீட்டில் கழிவறை கட்டித் தாருங்கள் எனக் கூறி ஷாலினி கணவரை வற்புறுத்தி வந்தார். ஆனால் சசிகுமார் 7 வருடங்களாக பல காரணங்களைக் கூறி கழிவறை கட்டமால் காலத்தை கடத்தி வந்தார்.
இது தொடர்பாக கணவருடனும், அவர் மாமனாரும் அடிக்கடி ஷாலினி சண்டை போட்டு வந்த நிலையில் பதிலுக்கு அவர்களும் ஷாலினியை திட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழிவறை தொடர்பாக பிரச்சினை ஆரம்பித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த ஷாலினி அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் மற்றும் அவர் மாமனார் கூறினார்கள். பின்னர் ஷாலினியின் பெற்றோர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத பெண் பெற்றோர்கள் ஷாலினியை கணவரும் அவர் மாமனாரும் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டதாக பொலிஸில் புகார் அளித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.