கணவரின் குடியை மறக்க மாத்திரை கொடுத்த மனைவி…!!! ஆத்திரமடைந்த கணவரின் கொடூர செயல்…!!!
திருப்பூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கணவர் மற்றும் இரண்டு மனைவிகள், பிள்ளைகள் போன்ற அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையாகி ரமேஷ் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவிகளிடம் சண்டை போடுவதை வழக்கம் கொண்டார்.
இந்த கொடுமை தங்க முடியாமல் மனைவி இருவரும் கணவரின் குடியை மறக்க மாத்திரை வாங்கி கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதனால் சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்த ரமேசுக்கு மாத்திரை கொடுத்துள்ளனர்.
அந்த மாத்திரையை குடித்து சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் வர சந்தேகமடைந்த ரமேஷ், எனக்கு என்ன கொடுத்தீர்கள்? என கேட்டார். அதற்கு மனைவிகள் நீங்கள் குடியை மறப்பதற்கு மாத்திரை கொடுத்தோம் என கூறியதும், கோபம் அடைந்த கணவர் கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் முதல் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இரண்டாவது மனைவியின் கதறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் முதல் மனைவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் குற்றவாளியான ரமேஷ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.