சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வடகிழக்கு இந்தியாவிற்குச் செல்வதற்கு எதிரான பயண ஆலோசனை
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வடகிழக்கு இந்தியாவிற்குச் செல்வதற்கு எதிரான பயண ஆலோசனையை விடுத்துள்ளது. சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதா சட்டமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கே கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. அசாம், மேகாலயா மாநில நகரங்கள் சிலவற்றில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களுக்கு செல்லும் சிங்கப்பூரர்கள் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்குமாறு அமைச்சு ஆலோசனை கூறியுள்ளார்.
வீதிப் போராட்டங்கள் நடந்தி வருவதோடு அங்கே விமான, ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால், போக்குவரத்து சிரமமாகி இருப்பதை அமைச்சு தெரிவித்துள்ளது. சில இடங்களில் திறன்பேசிகளின் இணையச் சேவை, கட்டுப்படுத்தப்பட்டுள்து. அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிங்கப்பூரர்கள் அண்மை நிலவரத்தைப் பற்றி பயண முகவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் பயணத்துக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் அமைச்சு ஆலோசனை கூறியுள்ளன.
அண்மை தகவல்களைத் கூறிக்கொள்வது, நெரிசல் மிகுந்த பகுதிகளை தவிர்ப்பது போன்ற தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்யும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சு கூறிக் கொண்டுள்ளது.