பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்…!!
நேற்று முன்தினம் பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் மக்களிற்கு தமிழில் தனது நன்றியை கூறியுள்ளார். பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடைபெற்று முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் இந்த நிலையில் அவர் வெற்றி அடைந்த்துக்கு மக்களிற்கு தமிழில் நன்றி கூறியிருக்கும் சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்துள்ளார்.
பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் பாரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
British prime minister thanks Tamils and hopes for accountability in Sri Lanka https://t.co/GzmvIN97wm #lka pic.twitter.com/HBrPQkARtU
— Tamil Guardian (@TamilGuardian) 12 December 2019