விவாகரத்தின் பின் ஏற்பட்ட காதல், தாலி கட்ட மறுத்த பெண்ணுக்கு தகர கொட்டிலில் வைத்து காதலன் செய்த கொடுமை..! கோயம்புத்தூரை அதிர வைத்த சம்பவம்..!!
கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு நபர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேரு நகரை சேர்ந்த சக்திவேல் என்பவர் திலகவதி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
கணவன் இன்றி பெற்றோருடன் வாழ்ந்து வந்த திலகவதி அதே பகுதியை சேர்ந்த பத்மநாதன் என்பவருடன் பழக ஆரம்பித்தார். பத்மநாதனும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்ததால் திலவதியை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிய திலகவதி பத்ம நாதன் தாலி வாங்கி திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பின் பின்வாங்க தொடங்கி உள்ளார். இதனால் திலகவதி வேறு யாரையும் காதலிக்கிறார் என்ற எண்ணத்தில் சண்டையிட்டு வந்த பத்ம நாதன் சம்பவ தினமான நேற்று திலகவதியை அவர்கள் தினமும் சந்திக்கும் தகர கொட்டிலுக்கு வரும் படி கூறியுள்ளார்.
திலகவதி பத்ம நாதனை சந்திக்க சென்ற போது கையில் இருந்தா சுத்தியலால் திலகவதியை அடுத்து அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பத்ம நாதன். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலீஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்..!