பாம்பு கடித்தநிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த அவலம்…!
பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த போது சிறுமி ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார் இந் நிலையில் குறித்த பண்ணையைச் சேர்ந்தவர்களால் அந்தச் சிறுமி தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அந்த மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தனித்திருந்த சிறுமிக்கு கட்டாயப்படுத்தி ஊசி மருந்து ஒன்றை ஏற்றுவதற்கு மருத்துவமனை ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார். அப்போது அவருடன் கூடவே அவரது நான்கு சகாக்களும் இருந்துள்ளனர்.
சிறுமி அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் கை , வாய் என்பவற்றைக் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கூட்டாகச் சேர்ந்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அச் சிறுமி தனது பாட்டியிடம் நடந்த விடயத்தைக் கூறியதால் மருத்துவர்கள் ஊடாகப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் கைதுசெய்யப்பட்டதோடு ஏனையவர்களைப் பொலிசார் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரில் உள்ள ஓர் தனியார் வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”